மட்டக்களப்பு குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் சிறுவர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் வி.கிருபைராசா தலைமையில் குடியிருப்பு காளி கோயில்
வளாகத்தில் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து
சிறப்பித்தார்.
தேசிய கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
267 மாணவ சிறார்களை கொண்ட கிராமபுர பாடசாலையான குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில், நான்கு வருடங்களிற்கு பின்னர்,
பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் விளையாட்டு
விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறார்களின் வினோத உடைப்போட்டி, ஓட்டப்போட்டி, தடை தாண்டல், பந்து சேகரித்தல், பலுன் ஊதி உடைக்கும் போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள்,
பழைய மாணவர்களுக்கான சங்கீத கதிரை என்பனவும் இடம்பெற்றன.
போட்டியில் வெற்றி மாணவர்கள்,பெற்றார் ,ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற இல்லங்களுக்கு அதிதிகளினால் வெற்றி கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி யூ.விவேகானந்தம் மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஆரம்ப கல்வி பிரிவின் வளவாளர்கள்,
அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.