மட்டக்களப்பு குருக்கள்மடம் இயந்திர பாதை ஊடாக பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் துறையடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் எழுவான் கரை மற்றும் படுவான்கரையினை இணைக்கும்; இயந்திர பாதை சேவையில் பணம் அறவீடு செய்வதற்கு எதிர்ப்பு
தெரிவித்தே, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் தவணைக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் மட்டக்களப்பு எழுவான் கரையிலிருந்து பெருமளவான ஆசிரியர்கள் மட்டக்களப்பு குருக்கள்மடம் துறை ஊடாக இயந்திர படகுகளில் படுவான்கரையில் உள்ள பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்வதற்கு சென்றுள்ளனர்.
இயந்திர பாதையில் செல்வதற்கு ஒருவருக்கு 50 ரூபா வீதம் அறவிடப்பட்ட நிலையில் பாதையில் செல்வதற்கு ஏறிய ஆசிரியர்கள் அதிலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் பல கஸ்டங்களுடன் தாங்கள் பாடசாலைகளுக்கு சென்று மகிழ்வுடன் கடமையாற்றி வருகின்றபோதிலும் இவ்வாறான செயற்பாடுகள் அந்த மகிழ்ச்சியை இல்லாமல்செய்யும் நிலைமையினை ஏற்படுத்துவதாகவுள்ளதாக ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டனர்.
பயணம் மேற்கொள்வதற்காக இயந்திர பாதையில் ஏறிய ஆசிரியர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை இறக்கி, கடமைக்கு செல்லாது திரும்பிச்சென்றனர்.
இயந்திர பாதைச்சேவையில் ஆசிரியர்களுக்கான கட்டணத்தினை குறைக்கும் வரையில் தாங்கள் கடமைக்கு செல்வதில்லையெனவும் வலயக்கல்வி அலுவலகம்
இது தொடர்பில் நடவடிக்கையெடு;ககவேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக நீண்ட நேரம் பாதைச்சேவை நடைபெறாத காரணத்தினால் இயந்திரப்பாதையூடாக செல்ல பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய
சூழ்நிலையும் ஏற்பட்டது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் இயந்திர பாதை ஊடாகபயணிக்கும ஆசிரியர்களிடம் 50 ரூபா கட்டணம் அறவீடு