மட்டக்களப்பு தேற்றாத்தீவில் ஒரு இலட்சம் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
185

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய கிராமத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு
பூராகவும் 100,000 அபிவிருத்தித் திட்டங்கள் இன்று காலை 8.52 மணிக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு பால புஸ்கருணியினை அழகுபடுத்தும் முகமாக மரநடுகை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெயராஜசூரியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தெற்கு கிராம உத்தியோகஸ்தர் சத்தியசீலன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.