மட்டக்களப்பு பட்டிருப்புவலயக் கல்விப்பணிமனைக்குமுன்பாக கவனயீர்ப்புபோராட்டம்!

0
72

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக, இன்று வலயக் கல்விப் மணிமனைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர்கள் வேண்டாம், வேண்டாம் அரசியல் வேண்டாம், நிர்வாக நடவடிக்கையை குழப்பும் நபர்களின் நாசகார செயலை நம்பாதீர்கள், நேர்மையான வலயக் கல்விப் பணிப்பாளர் எங்களுக்கு தொடர்ச்சியாக வேண்டும், கிராமப்புற பாடசாலைகளை வாழவைக்க வந்த வலயக் கல்விப் பணிப்பாளரை வேலை செய்ய விடு, கௌரவ ஆளுநரே எமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் வலயக் கல்விப் பணிப்பாளரை வேலை செய்ய விடு, வலயக் கல்விப் பணிப்பாளரை சுயமாக இயங்கவிடு போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கிழக்கு மாகாண ஆளுநருக்கு கையளிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த அதிபர்களிடம் மகஜரையும் கையளித்தனர்.