விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விவசாயச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள
தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் கவண்டிஸ் வாழைச் செய்கை மேற்கொள்ளபவர்களை விவசாயத்திணைக்களம் ஊக்குவித்தும் வருகின்றது.
இச்செயற்றிட்டத்தின் கீழ் பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நேற்றைய தினம் 13 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும்,
விவசாய உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் அறுவடை செய்யப்படும் வழைக்குலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக
விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்ட நிழ்வில் போரதீவுப்பற்றுப் பிரதே செயலாளர் ஆர்.இராகுலநாயகி,
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உதவிப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.