மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது

0
149

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா
இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன்
தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவரும், மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி முருகு தயாநிதி,
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முசாமில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலை கலாசார இலக்கிய நிகழ்வுகள்
இடம்பெற்றன.
இலக்கிய விழாவை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள்
அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
எழுத்தாளர் ரதி தனஞ்சயனின் ‘வாழ்தல் இனிது’ எனும் சிறுகதை நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள் என பெருமளவானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.