மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையில்
பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம் .முஸம்மிலின் ஒருங்கிணைப்பில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவும் பங்கேற்றார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், அதன் அடைவு மட்டங்கள், எதிர் நோக்கும் பிரச்சனைகள் என்பன குறித்து ஆராயப்பட்டதுடன்,
அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி ரமீசா , திட்டமிடல் உதவி பணிப்பாளர் ருவைத் உட்பட திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
சிலருக்கு காணி உறுதிப் பத்திரங்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.