மட்டக்களப்பு 5 கிராம சேவையாளர் பிரவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை.மாவட்ட அரசாங்க அதிபர்

0
641

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் முடக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் , கல்லடி திருச்செந்தூர் , நொச்சிமுனை ,பாலமீன்மடு ,சின்ன ஊறணி ஆகிய 5 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கொவிட் செயலணி குழு கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தெரிவித்துள்ளார்.