மட்டக்களப்பு ஆரையம்பதி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்றுக் கொள்ளவதற்காக பெருந்திரளான மக்கள் நேற்றிரவு 9மணி தொடக்கம் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
இன்று காலை 10 மனிக்கு பெற்றோல் வுவசர் வந்ததையடுத்து போத்தல்கள் மற்றும் கேன்களில் பெற்றோலை பெற்றுக் கொள்ள பொது மக்கள் சிலர் முற்பட்ட போது மோட்டார் சைக்கிள்களில் முச்சக்கர வண்டிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்ற பொது மக்கள் போத்தல்கள் மற்றும் கேன்களில் பெற்றோலை வழங்க வேண்டாமென எதிர்ப்பை வெளியிட்டனர்
இதன்போது அமைதி இன்மை ஏற்பட்டது பின்னர் இராணுவமும் பொலிசாரும் நிலைமை சுமூகமாக்கி பெற்றோலை விநியோகிக்க செய்தனர்.