பேரினவாத கட்சிகளின் தந்திர உபாயமான முறையில் எமது வாக்குகளை வடக்கு கிழக்கில் அவர்களுடைய பேரினவாத கட்சிகள் பெற்றுக் கொள்வதை தடுத்துக் கொள்வதற்காகவும் எமது தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டாக ஆட்சி அமைப்பதற்காகவும் எடுத்துக்கொண்ட ஒரு தந்திரோபாயமான தொழில்நுட்ப ரீதியான ஒரு தேர்தல் வியூகமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
நாம் மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமாக இருக்கின்றது. எனவே இந்த விருப்பத்தை தயவுசெய்து கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார்.