சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்தில்
சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு, ஏறாவூர் பிரதேச செயலகத்தின் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட
மூன்று பயனாளிகளிற்காக நிர்மானிக்கப்படவுள்ள மூன்று புதியவீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒவ்வொரு வீடும் தலா 7இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மானிய உதவியுடனும் சமுர்த்தி பயனாளிகளின்
நிதி பங்களிப்புடனும், ஏறாவூர் நகர் ஸகாத் நிதியத்தினதும் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினால் நன்மையடையும் பயனாளிகளின் நிறைவுசெய்யப்படும் வீட்டின் இறுதிப்பெறுமதிசுமார் 15 இலட்சமாகும் என்றும்
மதிப்பிடப்பட்டுள்ளது.