மட்டு.ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் சுவிஸ் உதயம் அமைப்பினால் உதவிகள் வழங்கல்

0
200

கிழக்கு மாகாணத்தில் சமூக பணியாற்றிவரும் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகத்தின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தினல் உள்ள கரடியன்குளம் பாடசாலையில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கரடியன்குளம் பாடசாலையின் ஆசிரியர்கள் சுவிஸ் உதயத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் பாடசாலையில் கற்பித்தல் கற்றல் செயற்பாடுகளுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் அக்கரைப்பாக்கியன் மற்றும் உறுப்பினர் க.யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, புல்லுமலையில் சருமநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளுக்கான சத்துணவு மற்றும் மருந்துபொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இரண்டாவது தடவையாக குறித்த பிள்ளைகளின் நன்மை கருதி குறித்த பொருட்கள் வழங்கப்பட்டன.