மட்டு.ஏறாவூர் நகர சபையில்
சத்தியப்பிரமாண நிகழ்வு

0
180

அரசாங்க நிருவாக சுற்றறிககைக்கு அமைவாக இந்த ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பம் செய்வதற்கான சத்தியப்பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையிலும் நடைபெற்றது.

ஏறாவூர் நகர சபையின் பிரதித்தவிசாளர் அப்துல் வாசித் தலைமையில்; சபை முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அதிகாரிகள் மற்றும் சகல ஊழியர்களும் பங்கேற்றனர்.

தேசியக்கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம்; இசைத்தலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சபையின் செயலாளர் எம்எச்எம். ஹமீம் சத்தியப்பிரமாணத்தை வாசித்தார்.
நாட்டிற்காக உயிர்நீத்த படைவீர்களுக்காக இந்நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவருட முத்திரையிடப்பட்ட கேக் வெட்டிய மகிழ்வுடன் சபையின் நிருவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.