சிறுவர் அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு- ஏறாவூர்;ப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தில் 18 பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின்கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களை உள்ளிடக்கிய ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் அதிபர்
எச்எம்எம். பஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு, உளவளத்துணை உத்தியோகத்தர்களான உ.சுபாநந்தினி மற்றும் ரொஸானா உதயசந்திரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்
ரீ.பிரபாகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.தயானந்த் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் உரிமை பாதுகாப்பு, பெண்கள் உரிமை பாதுகாப்பு, உளவளத்துணை தெளிவூட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆகிய விடயங்கள் தொடர்பாக மாணவர்கள் விழிப்புணர்வூட்டப்படுகின்;றனர்.