மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர் முதலாம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டு வீதிக்கான தார் இடும் பணிகளை மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் பணியினை ஆரம்பித்து வைத்தனர்.
மட்டக்களப்பு திருச்செந்தூர் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட முதலாம் குறுக்கு வீதிப்பகுதியில் வசிக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் மழை காலங்களில் பயணிக்க செய்ய முடியாத நிலையில் உள்ள இவ் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஜெயந்திரகுமாரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் 2021ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியின் மூலம் வீதி செப்பனிடப்பட்டு வீதிக்கான தார் இடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.