மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திற்குட்பட்ட பிரதேச மட்ட தமிழ் மொழி தின
போட்டி இன்று காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் கலாவுதீன் தலைமையில் பிரதேச மட்ட தமிழ் மொழி தினப் போட்டி
இடம்பெற்றது.
பேச்சு, கவிதை, விவாதம், கட்டுரை, வில்லிசை நாட்டார் பாடல் உட்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்,
நிகழ்வில் காத்தான்குடி கோட்ட மட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.