மட்டு. காத்தான்குடியில் நூல் அறிமுக விழா

0
167

மட்டக்களப்பு காத்தான்குடியில் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர் எழுதிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தாபன முகாமைத்துவமும் நடைமுறைகளும் எனும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ.அகமட் லெவ்வை ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் காத்தான்குடி பீச்வே மண்டபத்தில் இடம்பெற்றது. நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை ஓய்வு பெற்ற அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் நிகழ்த்தியதுடன் நூல் அறிமுக உரையை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.அன்சார் நழீமி நிகழ்த்தினார்.

நூலின் சிறப்பு பிரதிகளும் அதிதிகளுக்கு வழங்கப்பட்டன. பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், விஷேட விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன், இறைவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹீர் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஹாறூன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.