மட்டக்களப்பு காத்தான்குடியில் சுற்றுலா வணிக வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்றது.
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வு நடவடிக்கையின் அம்சமாக காத்தான்குடியில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை சார்ந்த கலை, கலாசார மத ரீதியான விழுமியங்களை உள்ளடக்கி அவற்றைப் பாதிக்காத சுற்றுலா முறையொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் ஷெய்குல் பலாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.
சிரேஷ்ட விரிவுரையாளர் முகம்மட் சிராஜ் ,காத்தான்குடி நகர ரிப்கா ஷபீன், டாக்டர் எம்.பி.மீரா முகைதீன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
தங்குமிட விடுதி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், உணவக உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.