மட்டு-காத்தான்குடியில் கிழக்கிலங்கை இஸ்லாமிய விசேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் பொதுச்சபை கூட்டம்

0
149

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய விN|ட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் பொதுச்சபை கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று இடம்பெற்றது.
கிழக்கிலங்கை இஸ்லாமிய விசேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் பள்ளிவாயல் மண்டபத்தில், தலைவர் எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி நஜிமுதீன், பிரிவு கிராம உத்தியோகத்தர் மபாஸா சுல்பிகார், அபிருத்தி உத்தியோகத்தர்கள், அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்