மட்டக்களப்பு காத்தான்குடியில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை முதல் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது.
காத்தான்குடி வடக்கு எல்லை தெற்கு எல்லையிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்கள் வந்ததையடுத்து பொது மக்கள் எரிபொருற்களை பெறுவதற்காக வரிசையில் நின்று எரிபொருட்களை பெற்றுச் சென்றனர்.
இதன் போது பெற்றோல், மண்ணெண்ணை பெறுவதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது.