சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் முதியோர்களை கௌரவிக்கும் வைபவம் நேற்று மாலை முதியோர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் தலைவர் கே.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட சமூக சேவை உத்தியோகத்தர்கள் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் முதியோர் இல்ல நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது முதியோர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.