மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து, டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை துரிதமாக முன்னெடுத்து வருகின்ற நிலையில்,
இன்று வீடு வீடாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சென்று ,டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
டெங்கு நுளம்பை பரவும் இடங்களாக காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.