மட்டு.காத்தான்குடி கலை இலக்கிய மன்ற கலை நிகழ்வு

0
192

மட்டக்களப்பு காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தினால் இன்று கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடாத்தப்பட்டது.
மன்றத்தின் தலைவி திருமதி ஜாஹிதா ஜலால்தீன் தலைமையில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலய முன்றறில்
நிகழ்வு இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் பிரதம விருந்தினராக
கலந்து கொண்டார்.
கிராம உத்தியோகத்தர் திருமதி பாத்திமா ரிப்கா, காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாறூக், உட்பட
பலரும் கலந்து கொண்டனர்.
கலை இலக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.