மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரதான மண்டபம் மற்றும் விடுதிக்கட்டடம் என்பன மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று கட்டடத்;தினை திறந்து வைத்தார்.
இதன் போது கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் சகல துறைகளிலும் உயர் சித்தி அடைந்த மாணவிகள் கொளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.