மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில், சரஸ்வதி சிலை பிரதிஸ்டை செய்து திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
சிலை திறந்து வைக்கும் நிகழ்வு அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இங்கு விசேட பூசை வழிபாடுகளை கோட்டைக்கல்லாறு அம்பாறைவில் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவாச்சாரியார் ரதிகர குருக்கள் நிகழ்த்தினார்.
ஐந்து அடி உயரம் உடைய இவ் சரஸ்வதி சிலையை பாடசாலையின் பழைய மாணவர்களான லண்டனில் வசிக்கும் பூபாலரெத்தினம் நந்தகுமாரன்,
நந்தீஸ்வரன் ஆகியோர் நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.