மட்டு.கோட்டைக்கல்லாற்றில் பாரம்பரிய போர்த்தேங்காய் அடித்தல் நிகழ்வு

0
1053

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறுகிராமத்தில் வருடாந்தம் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான போர்த்தேங்கர்ய அடித்தல் நிகழ்வு கோட்டைக்கல்லாறு கிராமத்திலுள்ள கண்ணகியம்மன் ஆலய முன்றலில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.

இங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற போர்த்தேங்காய் அடிக்கும் நிகழ்வு ஊரிலுள்ள வடசேரி,தென் சேரி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இப்போட்டி நடைபெற்றது.

இந் நிகழ்வை பார்வையிட பெருமளவிலான மக்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.