மட்டு.செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு முன்பாக பெற்றோர்கள் போராட்டம்

0
139

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தினை
இரத்துச் செய்யக்கோரி இன்று பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை பாடசாலைக்கு முன்பாக கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இந்தப் பாடசாலையில் கடமையாற்றி 5 ஆம் தர மாணவர்களுக்கு கற்பித்து வந்த ஆசிரியரொருவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரீட்சைக்கு 6 மாத காலப் பகுதியே உள்ள நிலையில் இடைநடுவில் இடமாற்றம் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் போராட்டக்காரர்கள் பாடசாலை பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஹக்கீமிடம் கையளித்தனர்.
மகஜரை மேலதிகாரிகளிடம் சமர்;ப்பிப்பதாக பிரதியதிபர் உறுதியளித்தார்.
அதன் பிரதிகள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும்
வழங்கப்படவுள்ளது.