மட்டு.தாண்டவன்வெளி வாவிக்கரை பகுதியில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

0
147

அழுத்த கம தர்கா நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு தாண்டவன்வெளி வாவிக்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பெறுமதியான ஒரு கிலோ 750 மில்லிகிராம் வல்லப்பட்டையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
பி எஸ் .பி .பண்டார தெரிவித்துள்ளார் .

கைது செய்யப்பட நபர் அழுத்த கம தர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு நகரில் குறித்த வல்லப்பட்டையினை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரபட்ட மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .