மட்டு.படுவான்கரைக்கான முதலாவது புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையம் திறப்பு

0
152

கிழக்கு மாகாணத்தில் 16 கோப் பிரஸ் வர்த்தக நிலையங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு படுவான்கரைக்கான முதலாவது புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையம் இன்று வவுணதீவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு, கன்னன்குடா ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் நா.உருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்தார்.

இந் நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாணம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான அஸ்மி, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்து கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஈச்சந்தீவு கன்னன்குடா பலநோக்கு கூட்றவுச் சங்கத்தின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் இலகுவான முறையில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் கோப் பிரஸ் வர்த்தக நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.