மட்டு.பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலுள்ள
நீரோடையிலிருந்து சடலம் மீட்பு

0
326

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 29வயதுடைய பேரின்பராசா பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர் பயணித்த துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.