மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சேதனைப்பசளை பாவனையளர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்றில் சேதனைப்பசளைகள் உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவருக்கு அவருடைய தொழில் முயற்சியை விருத்தி செய்யும் நோக்கில் வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதன்மூலம் பத்தாயிரம் மெட்ரிக் தொன் சேதன உரம் தயாரிக்கப்படுவதுடன் 10 இற்கம் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கப்பெறும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நிதியுதவி வழங்கப்பட்டது.