‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லா தொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஐந்து நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் பால்நிலை அடிப்படியிலான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயல்பாட்டின் மாவட்ட இளைஞர் யுவதிகள் ஊடாக இதனை செயல்படுத்தும் வகையில் மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனத்தின் ஏற்பாட்டில் எஸ்.எல்.சி.டி.எப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட இளைஞர் யுவதிகளுக்கான குறித்த பயிற்சி பட்டறை மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனத்தில் நடாத்தப்பட்டது .
மட்டக்களப்பு வை.எம்.சி.எ.நிறுவனத்தின் உபதலைவர் வி.தர்சன் தலைமையில் ஐந்து நாள் நடாத்தப்பட்ட பயிற்சி பட்டறை வளவாளர்களாக ரஜனி இராஜேஸ்வரி மற்றும் வீரசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கி இருந்தனர் .
ஐந்து நாள் நடாத்தப்பட்ட பயிற்சி நெறியில் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன .
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் எஸ்.எல்.சி.டி.எப் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் சவினிசிறிகுமார், களமுகாமையாளர் ஜெசிந்தா முருகவேள் வை.எம்.சி.எ நிறுவனத்தின் பொதுச்செயலாளர் எ.யூலியன் குருஸ் ,எஸ்.எல் சி.டி.எப் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் சொர்ணலிங்கம் உட்பட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்