29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. மண்முனையில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொதுச்சந்தை, பொலிஸ் வளாகம், பிரதேச செயலகம், பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொவிற் தொற்று மிக வேகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவிவரும் நிலையில் இக் கிருமி தெற்று நீக்கி திரவம் பொது இடங்களில் இளைஞர்களின் உதவியுடன் விசிறப்பட்டு வருவதாக அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles