மட்டு. மண்முனை வடக்கில் முதியோர்களுக்கு நிதியுதவி!

0
206

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முதியோர்களுக்கு நிதியுதவி
வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
விசேட தேவையுடையவர்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு தகவல்களுக்கான நிலையம்,
அகில இலங்கை கிறிஸ்தவ வாலிபர் சங்கம் மற்றும் உளவள துணை ஆலோசனை நிலையம் ஆகியன
இணைந்து கிறிஸ்தவ கண்பார்வையற்றோர் அமைப்பின் அனுசரணையுடன், நிதியுதவி வழங்கும் நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.
கொடுப்பனவு வழங்குவதற்காக 281 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், 15 பேருக்கு 5 ஆயிரம் ரூபா
பெறுமதியான காசுக் கட்டளை வழங்கப்பட்டது.