தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எரிபொருள் பாவனையாளர்களுக்கு புதிய நடைமுறையில் எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல்கள் இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு எதிர்வரும் திங்கள் கிழமை முதல் இலகுவான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கிராம சேவையாளரினால் அட்டவணைப்படுத்தப்பட்ட காட் முறையில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவது தொடர்பாக பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜி.சுகுணன்,மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்
இ.உதயகுமார்,உட்பட மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், என பலர் கலந்துகொண்டனர் .