வறுமை கோட்டின் கீழ் வாழும் சிறார்களின் குடும்பங்களுக்கான இடர்கால நிவாரண உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இடம்பெற்றது
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமை கோட்டின் கீழ் வாழும் சிறார்களின் குடும்பங்களுக்கான இடர்கால நிவாரண உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இடம்பெற்றது
கனடிய .சி.ஆர்.இ.பி. அமைப்பின் நிதி உதவியின் கீழ் ‘வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம்’ எனும் கருப்பொருளில் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் உலர்வுணவு பொதிகள் வழங்கப்பட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் செயல்திட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி ,தன்னாமுனை , சவுக்கடி ,விபுலாந்தபுரம் ,ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான இடர்கால நிவாரண உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
கிழக்கு சமூக அபைவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ் .ஜெயராஜ் தலைமையில் கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் மயிலம்பாவெளி அலுவலகத்தில் இடம்பெற்ற உலர்வுணவு பொதிகளும் வழங்கும் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி . கிராம சேவை உத்தியோகத்தர் . எ . பாலகிருஷ்ணன் ,ஏறாவூர் பற்று சமூக சேவை உத்தியோகத்தர் பி .டிமலேஸ் , கிழக்கு சமூக அபைவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் இ . முகுந்தன் , கிழக்கு சமூக அபைவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் கலந்துகொண்டனர்
கனடிய .சி . ஆர் .இ . பி . அமைப்பின் நிதி உதவியின் கிழக்கு சமூக அபைவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பினால் ‘ வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம் ‘ எனும் கருப்பொருளில் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் , சுகாதாரம் ,மாணவர்களின் கல்வி மேம்பாடு ,போன்ற அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்யும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது