மட்டு.மாநகர எல்லைக்குள் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன

0
133

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பெருமளவான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நகருக்குள் அன்றாட தேவைக்கு வருவோரும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அண்மைக்காலமாக நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மூடப்ட்டுள்ள அதேவேளை,
மட்டக்களப்பு மாநகரில் உள்ள முக்கிய உணவகங்கள் பல எரிவாயு இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் பதாதைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் முக்கிய திணைக்களங்களங்கள்,வர்த்தக நிலையங்களில் கடமைபுரியும் பலர் உணவங்கள் பல மூடப்பட்டுள்ளதால் ஆகாரம் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.