கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் மந்திரகல்ப்ப மஹா யாகத்தினை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகள்
நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பில் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினரால் இந்த கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் உள்ள நாட்டியப் பள்ளிகளில் பயிற்சிபெறும் பயிற்சியாளர்களைக்கொண்டு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன
நாட்டிய கலாலயா மற்றும் கலா வித்தகர் வசந்தி நேருவின் திருநித்திய கலாலயா உட்பட பல நடனப்பள்ளியின் மாணவர்கள் இதன்போது தமது கலை திறமையினை நேற்றைய தினம்
வெளிப்படுத்தினார்.
பெருமளவான மக்கள் கலை நிகழ்வுகளைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.