மட்டு.மாவட்ட செயலக சமுர்த்தி
திணைக்கள முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

0
166

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அசாதாரன சூழ்நிலை காரணமாக சில மாதங்கள் தடைப்பட்டிருந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது இன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு 14 பிரதேச செயலகங்களில் இருந்தும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்

2022ம் ஆண்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் தற்போது சமுர்த்தி வங்கியூடாக வழங்கப்படும் முதியோர் கொடுப்பணவு, சமுர்த்தி கொடுப்பணவு, காத்திருப்போர் கொடுப்பணவுகளை துரிதமாக வழங்குவதற்கும் , 2022ல் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சௌபாக்கியா வீட்டுத்திட்டம் பற்றிய முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதே வேலை பசுமையான தேசம் வீட்டுத்தோட்ட முன்னேற்றம் அதன் தொடச்சியான செயற்பாடுகள் ,மாணவர்களுக்கான சிப்தொற புலமை பரிசில், சமூக பாதுகாப்பு கொடுப்பணவுகள்,சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை 2023ல் புதுப்பித்தல்,சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக வாழ்வாதார கருத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டன

முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி பிரிவு கணக்காளர் எம்.எஸ்.பஸீர்,சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், சமுர்த்தி வங்கி பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர், கணக்காய்வு பிரிவு முகாமையாளர் இ.முரளிதரன், சமுர்த்தி நிவாரன பிரிவு முகாமையாளர் அன்னமலர் பிரபு, சமூக பாதுகாப்பு நிதிய முகாமையாளர் எஸ்.பிரதீபன், சமுதாய அடிப்படை அமைப்பின் முகாமையாளர் எஸ்பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.