மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவற்காடு, மாவடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 76 வயதுடைய தம்பியப்பா சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் வாடியமைத்து தனது வயல் மற்றும் மாடுகளை நீண்டகாலமாக பராமரித்து வருவதாகவும் இடையிடையே தனது வதிவிடத்திற்கு சென்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று உறவினர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்றவேளை தனது வாடிக்கு அருகில் உள்ள வயல் பிரதேசத்தில் மரணமடைந்த நிலையில் சடலமாக காணப்பட்தாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.