மட்டு.விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு

0
232

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமை தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது.

ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவரின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் தரம் ஒன்று மாணவர்களது பெற்றோரின் ஒத்துழைப்பில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் சரஸ்வதிக்கான விசேட பூஜை வழிபாடுகளுடன் மாணவர்களுக்கான ஆசிகள் வழங்கப்பட்டு. தரம் இரண்டு மாணவர்களால் தரம் ஒன்று மாணவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்பளிக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தரம் இரண்டு மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.