மட்டக்களப்பு மண்டூர் கமநல அபிவிருத்தி நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தோட்டங்களை துவம்சம் செய்துள்ளது.கமநல உத்தியோகத்தர்களினால் அமைக்கப்பட்டிருந்த வாழைத்தோட்டம் மற்றும் மரவள்ளி தோட்டம் என்பன முற்றாக யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சில தென்னை மரங்களும் வேறு சில பயன்தரு மரங்களும் சேதப்படுத்தபட்டுள்ளன.
கமநல கேந்திர நிலையத்தின் பின்புறம் மற்றும் முன்புறத்திலேயே அதிக சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் கட்டடத்திற்கோ மனிதர்களுக்கோ சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.
நேற்றிரவு கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி துரத்த முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை என்பதுடன் 11 யானைகள் கூட்டமாக வந்ததாகவும் காவலாளி தெரிவித்தார்