மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில், 156 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அறிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் தொடர்வில், அவர், அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, புதிதாக, 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனால், கடந்த 4 நாட்களில், 156 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம், 357 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை, 3 ஆயிரத்து 540 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில், இதுவரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் குறிப்பிட்டுள்ளார்.