27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரில், இளம் குடும்பஸ்தர் மரணம்!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில், இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கை கலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவை சேர்ந்தவர்கள், மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தினால், தலையில் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர், நானாட்டான் பிரதேச வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த, 25 வயதுடைய, ஒரு குழந்தையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles