மன்னாரில், தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

0
180

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கை தமிழரசு கட்சியினால், மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளை செயலாளரும் மன்னார் நகர சபை உப தவிசாளருமான ஜான்சன் பிகிராடோ தலைமையில், தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வின் பிரதான ஈகைச் சுடரை, முன்னாள் போராளி ஒருவர் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், திலீபனின் உருவ படத்திற்கு, மலர் மாலை அணிவித்தார். அதன் பின்னர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மன்னார் நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் அணிதிரண்டு, மலரஞ்சலி செலுத்தினர்.