மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக, மீன்பிடி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது.
இன்றைய தினமும் கடும் காற்று வீசி வருவதனால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர்.
தாழ்வுபாடு, சௌத்பார், பேசாலை, பள்ளிமுனை ஆகிய கிராம மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக கடல் அலைகளும் அதிகம் காணப்படுவதனால் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வள்ளங்கள் வலைகள் உட்பட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.
காற்றின் வேகம் காரணமாக கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மீனவரகளின்; வாடிகளும் தூக்கிவீசப்பட்டு சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.