மன்னார் பேசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனரென தமிழக கடலோர காவல் குழுமம் தெரிவித்துள்ளது. தமிழகம் சென்ற இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்வடைந்துள்ளது. மன்னாரிலிருந்து அகதிகளாச் சென்றவர்களை, படகோட்டி இன்று காலை தனுஷ்கோடியை அடுத்துள்ள முதலாவது மணல் திட்டில் இறக்கியுள்ளனர். இவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.