மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் புத்தாக்க கண்காட்சி

0
120

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின், 2023 ஆம் ஆண்டுக்கான, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்காட்சி, அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில், இன்று நடைபெற்றது.

புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் தேடிக்கற்று, அதனூடாக கல்வியை விருத்தி செய்யும் முகமாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடனும், கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டு, கல்லூரி பொது ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில், பிரதம விருந்தினராக, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முன்னாள் அதிபரும் டிலாசால் அருட்சகோதரர்களுக்கான வடக்கு மாகாண இணைப்பாளருமான ஸ்ரனிஸ்லாஸ் அடிகளார் பங்கேற்றார்.

கண்காட்சியில், தரம் 6 முதல் 12 வரையான மாணவர்கள் உருவாக்கிய, நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் மற்றும் புத்தாக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.