மன்னார் மாந்தை மேற்கில், கிராம அலுவலர்கள் மற்றும் காணி அதிகாரிகளுக்கு, காணி தொடர்பில் கருத்தமர்வு

0
145

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு, காணிப் பிணக்குகள் மற்றும் காணிச் சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் கருத்தமர்வு, மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், இன்று இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற கருத்தமர்வில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

காணி தொடர்பாக, ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன் பல்வேறு விளக்கங்கள் வழங்கினார்.

காணி பிணக்குகள் ஏற்படும் போது, எவ்வாறு அவற்றை இலகுவாக தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.

அத்துடன், காணி சட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், வருகை தந்த அதிகாரிகள், தமது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டனர்.