மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கடமையை பொறுப்பேற்றார்.

0
162

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன், மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்ட புதிய அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், இன்று காலை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.